ஞாயிறு, 31 அக்டோபர், 2010

எந்திரன் சாதனை - எதிரிகள் வேதனை
திருநெல்வேலி  நகரில் இது வரை சினமா தோன்றிய காலத்தில் இருந்ந்து இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனைகளை சூப்பர ஸ்டார் தலைவர் செய்து வருகிறார்கள்.

  1.  1990 -ல் தளபதி
திருநெல்வேலி- யில் 1990  வரை எந்த திரைப்படமும் அதிகாலை 4  மணிக்கு திரையிட்டது கிடையாது. ஆனால் தளபதி அதிகாலை 4  மணிக்கு திரையிடப்பட்டது. பக்கத்துக்கு வீட்டு நபர்களின் வேண்டுகோளுக்கிணங்க கலக்டர் தலையிட்டு முன்றாவது நாளில் இருந்து காலை 6 மணிக்கு காலை காட்சி ஆரம்பிக்க பட்டது. தொடர்ந்து பேரின்ப விலாஸ் தயீட்டரில் நூறு ௦௦ நாட்கள் ஓடியது.  இந்த காலை காட்ஷி சாதனையை இன்று வரை எந்த படமும் முறியடிக்க வில்லை.

  1. சந்திரமுகி முதன் முதலாக திருநெல்வேலியில் இரண்டு திரையரங்குகளில் வெளியிட்டு இரண்டிலும் நூறு  நாட்கள் ஓடியது. வேறு எந்த படமும் இரு திரை அரங்குகளில் நூறு நாட்கள் ஓடியது இல்லை.
  2.  சிவாஜி மூன்று திரை அரங்குகளில் திரையிட்டு மூன்றிலயும் நூறு நாட்கள் ஓடியது. (ராம் , பேரின்ப விலாஸ், ஸ்ரீ ரத்னா) இன்று வரை இந்த சாதனையை எந்த படமும் முறியடிக்க வில்லை முறியடிக்கவும் முடியாது. ஏனென்றால் இதுவரை எந்த படமும் மூன்று திரை அரங்குகளில் வெளி வந்தது இல்லை.
  3. எந்திரன் நான்கு திரை அரங்குகளில் (ராம் , பேரின்ப விலாஸ், ஸ்ரீ ரத்னா, பாம்பே)  வெளியிட்டு இன்று வரை நான்கிலும் ஓடி கொண்டு உள்ளது. இந்த சாதனையையும் யாரு முறியடிக்க முடியாது. ஏனென்றால் திருநெல்வேலி மாநகரில் ஒரு திரைப்படம் இரண்டில் நூறு நாள் ஓடி , பின் மூன்று திரை அரங்கில் நூறு நாள் ஓடி பின் நான்கு திரை அரங்கில் வெளியிடுவதற்கு முன் அந்த ஹீரோவின் திரை வாழ்க்கை முடிந்து விடும் .
ஆகவே சாதனைகளின் நாயகன் நம் தலைவர்

சாதனைகள் தொடரட்டும் ...
சாமி துணை இருக்கட்டும்..
ரசிகர்களின் மனம் குளிரட்டும்
தமிழக சினிமா செழிக்கட்டும்

அன்புடன்

கூடல் இந்தியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக